Saturday, December 6, 2025
Home2020 - 2021 ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்காத இஃப்கோ டோக்கியோ நிறுவனம்...

2020 – 2021 ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்காத இஃப்கோ டோக்கியோ நிறுவனம் மற்றும் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் கண்டன போராட்டம்.

நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு 2020 – 2021 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்காமல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஃப்கோ டோக்கியோ நிறுவனம் இழுத்தடிப்பு செய்து வருகிறது. \r\n\r\nஇதனால் நெற்பயிர் பாதிப்புகளை சந்தித்து காப்பீடு செய்த விவசாயிகள் அந்த நிறுவனத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை கடைமடை விவசாயிகள் சங்கத்தினர் புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். \r\n\r\nகாப்பீடு நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை கழுத்தில் தொங்கவிட்டபடி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கடைமடை விவசாயிகள் சங்கத்தினர் விரைந்து காப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். \r\n\r\nமேலும், நாகை மாவட்டத்தில் உள்ள 144 வருவாய் கிராமங்களுக்கு சுமார் 92 கோடி ரூபாய் காப்பீடு தொகை வழங்க வேண்டிய நிலையில், இதுவரை வெறும் 28 வருவாய் கிராமங்களுக்கு சுமார் 12 கோடி ரூபாய் காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கி இருப்பதாக வேதனை தெரிவித்தனர். \r\n\r\nமறு சீராய்வு செய்து காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் மத்திய அரசிடம் முறையிட்டு தமிழக அரசு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும் என்று கூறிய விவசாயிகள், தமிழ்நாட்டிற்கு என தனி காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். \r\n\r\nகழுத்தில் பதாகைகளுடன் நாகையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மத்திய அரசுக்கு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.\r\n\r\nநாகை மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments