குறள் 134:
\n
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
\n
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
\n
மு.வரதராசன் விளக்கம்:
\n
கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.
\n
சாலமன் பாப்பையா விளக்கம்:
\n
பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.
\n
கலைஞர் விளக்கம்:
\n
பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.
\n
English Couplet 134:
\n
Though he forget, the Brahman may regain his Vedic lore;
\n
Failing in ‘decorum due,’ birthright’s gone for evermore
\n
Couplet Explanation:
\n
A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed
\n
Transliteration(Tamil to English):
\n
maRappinum oththuk koLalaakum paarppaan
\n
piRappozhukkang kundrak kedum
