குறள் 133:
\n
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
\n
இழிந்த பிறப்பாய் விடும்.
\n
மு.வரதராசன் விளக்கம்:
\n
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
\n
சாலமன் பாப்பையா விளக்கம்:
\n
தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.
\n
கலைஞர் விளக்கம்:
\n
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
\n
English Couplet 133:
\n
‘Decorum’s’ true nobility on earth;
\n
‘Indecorum’s’ issue is ignoble birth
\n
Couplet Explanation:
\n
Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth
\n
Transliteration(Tamil to English):
\n
ozhukkam udaimai kutimai izhukkam
\n
izhindha piRappaai vidum
