Saturday, December 6, 2025
Homeதினம் ஒரு திருக்குறள் 02-05-2024

தினம் ஒரு திருக்குறள் 02-05-2024

குறள் 133:

\n

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

\n

இழிந்த பிறப்பாய் விடும்.

\n

மு.வரதராசன் விளக்கம்:

\n

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

\n

சாலமன் பாப்பையா விளக்கம்:

\n

தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.

\n

கலைஞர் விளக்கம்:

\n

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.

\n

English Couplet 133:

\n

‘Decorum’s’ true nobility on earth;

\n

‘Indecorum’s’ issue is ignoble birth

\n

Couplet Explanation:

\n

Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth

\n

Transliteration(Tamil to English):

\n

ozhukkam udaimai kutimai izhukkam

\n

izhindha piRappaai vidum

RELATED ARTICLES

Most Popular

Recent Comments