திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை பல ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்குள் பல்வேறு கழிவு பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.
\n
இந்நிலையில் திடீரென கழிவு பொருட்களில் தீ பற்றி கொழுந்து விட்டு கரும்புகையுடன் எரிந்து வருகிறது. தீ விபத்து குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையங்களில் இருந்து இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
\n
\n
ரசாயன நுரையையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். கோடை வெயில் ஒருபுறம் சுட்டெரித்து வரும் சூழலில் தீபிழம்புகளின் வ??ப்பம் மறுபுறம் என தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
\n
ALSO READ | கோயம்பேட்டில் கள்ளக்காதல் விவகாரத்தில் வீட்டு உரிமையாளரை படியில் தள்ளி கொலை செய்த கள்ளக்காதலன்.
\n
\n
\n
பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள தொழிற்சாலை என்பதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளதால் யாருக்கும் தீக்காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
\n
\n
\n

\n